" செவ்வாயில் தண்ணீர்
தேட வேண்டாம் ...
இருக்கும் பூமியையாவது...
பத்திரப்படுத்துவோம்...
புதிதாய் மரம்
நட வேண்டாம் ....
இருக்கும் மரங்களையாவது
கொலை செய்யாமல் ...
பத்திரப்படுத்துவோம்..
புதிதாய் தொழிற்சாலைகள்
தொடங்க வேண்டாம் ..
எஞ்சி இருக்கும் ஓசான்
படலத்தையாவது ...
பத்திரப்படுத்துவோம்....
புதிய புதிய மருந்துகள்
கண்டுபிடிக்க வேண்டாம் ...
இருக்கும் மருந்துகளில்
போலி இல்லாமல் ..
பத்திரப்படுத்துவோம்...
புதிய தொழிநுட்ப
செல்பேசிகள் வேண்டாம் ...
இருக்கும் செல்பேசிகளையாவது
ஆபாசத்திற்கு பயன்படுத்தாமல்....
பத்திரப்படுத்துவோம்...
புதிதாய் சாமியார்கள்
தேடி போக வேண்டாமே ....
அருகில் இருக்கும்
"அப்பா -அம்மாவை "...யாவது
பத்திரப்படுத்தாலமே .....???????? "