பழகியவர்கள் நாம் ...
விபத்து நடந்தாலும்
சுற்றி நின்று
'அய்யோயோ பாவம்ல !!!"
என்றே உச் கொட்டுபவர்கள்...
தமிழனை யாரு கொன்றாலும்
"நம் வீட்டில் நடக்கலல!!!"
அப்பாடா .. தப்பித்தோம் !..
என்றே பெருமூச்சு விடுபவர்கள் ...
எப்படியேனும் ...
எவருக்கேனும்....
லஞ்சம் கொடுத்து
தன் காரியம் சாதிக்கும்
சாதனையாளர்கள் நாமல்லவா!!!!!!
மனநிலை குன்றியவர்கள்
மந்தைகளாய் சுற்றினாலும் ...
"அட இங்க பாருடா...லூசே !!!
கிறுக்கே ..,பைத்தியத்தை ...,
மெண்டலே ..."என்றே சொல்லும்
வார்த்தை கெட்டிக்காரர்கள்...நாம்
காசுக்காக ஓட்டை விற்கும்
மக்களாட்சியின் ...மிக
தந்திர வியாபாரிகள் நாம் ....தானே !!
இப்படி யார் சொன்னாலும்
வாடிக்கையாய்..
வேடிக்கை பார்த்தே
பழகியவர்கள் நாமல்லவா !!!!!...."