
" இறைவன் இடத்தும்..
இரண்டாம் படைப்பு தான் ...
தாய்ப்பாலை ருசிக்கும்
முன்னே ..கள்ளிபாலை..
ருசித்து மாண்டவர்கள் ...
என் இனத்தவர் ...
நல்லவேளை பாரதி ..
ஆணாய் பிறந்தான் ...
இல்லையேல் ...
இன்னும் ஒரு
நூற்றாண்டு ஆகி இருக்கும் ..
எங்கள் சுதந்தரம் கிடைக்க...
ஆடை கிழித்து ..
வேட்டையடாபடுகீறோம்...
எங்களக்கு
இருப்பது தானே ..
அவர்கள் அம்மாக்கும் ...
இருக்கும் ..
தெரியவில்லையா ?...
இந்த காமுக வேடர்கள்கு.....
காதல் ...
போல் இல்லை...
காதலிப்பவர்கள் ...சுத்தமாக ...?....
சம உரிமை கிடைத்தாலும் ....
சங்கடத்தில் ...
சங்கமிக்கும் ...என் போல்
சகோதரிக்காக...
சப்தமில்லாமல்...
வேண்டிகொள்ளுகிறோம்...
தாயின் வயிற்றில்..
இருக்கும் போதே ...!!!!