Monday 26 April 2010

யாரும் இல்லை ....


" சிரிப்பலையுமாய்..
  சிகரெட் புகையுமாய்..
  சிறகடித்த இடம் ..

  நீண்ட வரிசையாய்
  தோள் மீது தோள் இடித்து
  இளைப்பாறிய இடம் 

  சில சமயம் பளிச்சிடும் 
  மழைச் சாரலில் 
  கறுத்திடும்...

  எப்போது போனாலும், 
  எனக்கொரு இடமிருக்கும்.., 
  எழுந்து போனாலும் ..,
  என் தடம் இருக்கும் ,.,
  எல்லாம் காலத்தும்..,
  நிரம்பி இருக்கும் ..... 

  இளம் வயதில் அங்கே 
  வரத் துடிக்கும் ..
  முதுமையில் வர நினைத்தாலும் 
  வயது தடுக்கும் ...
 
  காதல் கூட காணாமல் 
  கடந்து இருக்கலாம் -
  சிலர் தம் வாழ்வில் ...
  இந்த குட்டிச்  சுவர் காணாமல் 
  யாரும் இல்லை 
  பலர் தம் வாழ்வில்..."