சில சிரிப்புகள்
மட்டும் தான்....
பைத்தியமாக்குகிறது..
சில பார்வைகள்
மட்டும் தான்...
திரும்பி பார்க்க
வைக்கிறது ....
சில மௌனங்கள்
மட்டும் தான் ....
கொலையும் செய்ய
தூண்டுகிறது..,
சில உரசல்கள்
மட்டும் தான்....
மனதில் எரிமலையை
வெடிக்க செய்கிறது ....
சில காத்திருப்புகள்
மட்டும் தான்...
பொறுமையின் எல்லையை
புரிய வைக்கிறது ....
சில சந்திப்புகளில்
மட்டும் தான்.....
பேச்சும் மறந்து
போகிறது....
இந்த
சிலரிடம்
மட்டும் தான் ..
சிற்சில நெருக்கம் ....
சிற்சில கோபம் ...
சிற்சில கண்ணீர் ...
சிற்சில காதல்......