"..சாக்கடையை..
அசுத்தம் செய்யாத
பெண் சிசுக்கொலை ..,
கூட்டமில்லாத
பள்ளிக்கூட ஆட்டோ
பயணம் ...
மணல் திருடா
டிப்பர் லாரி ...
லஞ்சம் வாங்காத..
தாசில்தார் .....
இடிக்காத பேருந்துப் பயணம் ..,
கடிக்காத..வெறி நாய்கள் ..
அதிக வண்டிகள்
வராத அரசியல் ..,
வராத அரசியல் ..,
அழகாக இட்ட ..
தமிழ் கையொப்பம்...
இச்சையில்லாத காதல் ..,
கொச்சைபடுத்தா..,
ஆண் -பெண் நட்பு ....
குடிக்காத தகப்பன் ..,
குடித்தாலும் அடிக்காத அப்பன் ...
சிக்கனம் இல்லாத
சினிமா நடிகை..
சபலப்படாத சாமியார்கள் ..
'சாது' மிரளா சாதிகள் ..
'மதம்' பிடிக்காத மதங்கள் ...
ஆபாசம் இல்லாத SMS ...
அசிங்கம் இல்லாத MMS ...
பப் இல்லாத நகர் வீதிகள் ..
டூப் போடாத மருந்துகள்...
புகை இல்லா பூமி ..
பலி கேட்கா சாமி..
அகதிகள் இல்லாத தேசங்கள் ...
கைதிகள் இல்லாத சிறைவாசல்கள் ....
அணுகுண்டு தயாரிக்காத
அதிகார நாடுகள் ,..
வெடிகுண்டு
வைக்காத தீவிரவாதிகள்...
இப்படிதான் ..என் தூக்கம்
கலைகிறது ...
ஒரு இரவில் அல்ல ...
ஒ வ்வொரு...
இரவிலும் ...."