.
" சாலை ஓரத்தில் ..
தூசு படிந்து நிற்கும்
காரின் மீது இயல்பாய் ..
கிறுக்க தோன்றுகிறது ..
உன் பெயரை மட்டும் "..
" கவிதை எழுத
முயற்சி செய்ய வேண்டாம் ..
மீறினால் ..
காதல் செய்ய வேண்டும் ..
..என் கஷ்டம் ...
என்னோடு போகட்டுமே ...."
"மழை சாரலில் ஒரு
குடையில் ,இருவர் ..
ரசித்தது ..மழையை அல்ல ...
அவள் நெருக்கத்தை ..
மோட்டார் சைக்கிளில்
மலை பயணம் ...
ரசித்தது..மலையை அல்ல ..
அவள் மூச்சு காற்றை ..
நெருக்கமான பேருந்து
பயணத்தில் ..ரசித்தது .
கூட்டத்தை அல்ல ...
அவள் கூச்சத்தை ....
மாடிகளில் நின்று
பட்டம் விடுகில்..
ரசித்தது ,,பட்டத்தை அல்ல..
தெரியாமல் மோதி
கொள்ளும் மோதல்களை ..."