Friday 5 March 2010

காரின் மீது கூட ....

  .


  " சாலை ஓரத்தில் ..
    தூசு படிந்து நிற்கும் 
    காரின் மீது இயல்பாய் ..
    கிறுக்க தோன்றுகிறது ..
    உன் பெயரை மட்டும் "..

****வேண்டவே வேண்டாம்****

" கவிதை எழுத
முயற்சி செய்ய வேண்டாம் ..
மீறினால் ..
காதல் செய்ய வேண்டும் ..
..என் கஷ்டம் ...
என்னோடு போகட்டுமே ....
"

--> ரசனையோடு<-- ..

"மழை சாரலில் ஒரு
குடையில் ,இருவர் ..
ரசித்தது ..மழையை அல்ல ...
அவள் நெருக்கத்தை ..

மோட்டார் சைக்கிளில்
மலை பயணம் ...
ரசித்தது..மலையை அல்ல ..
அவள் மூச்சு காற்றை ..

நெருக்கமான பேருந்து
பயணத்தில் ..ரசித்தது .
கூட்டத்தை அல்ல ...
அவள் கூச்சத்தை ....

மாடிகளில் நின்று
பட்டம் விடுகில்..
ரசித்தது ,,பட்டத்தை அல்ல..
தெரியாமல் மோதி
கொள்ளும் மோதல்களை ..."