"சில சோகங்கள்
நம்மை
அசைத்து பார்க்கும் ..
அழுதால்.,
தோற்போம் ...
அடக்கினால்.,
ஜெயிப்போம்...
அவர்கள் அடக்கினார்கள்...
நாளை ஜெயிப்பார்கள்....
வரிசையில்
வருபவர்கள்..கோழைகளல்ல.,
இடையில்
இணைபவர்கள் ..வீரர்களல்ல.,
அவர்கள் .,
வரிசைகளுக்கு..
இலக்கணம் .,.,
கட்டிடங்கள் அப்படியே ..
சாய்ந்தன ..
கடைசி வரை ஒரு
செங்கல் கூட
தனியே வரவில்லை ..
கட்டிடக்கலையில்
கால் பதித்தார்கள் ...
ஒரு நாளில்,
சுனாமியையும்
ஜெயிப்பார்கள்.,
களவு ,
கொள்ளை...பற்றி
அவர்களுக்காவது..
கடைசி வரை ..
தெரியாமல்
போகட்டும் ....,
ஊடகங்கள்
உண்மையை உணர்த்தின ...
பரபரப்பிற்கும்
பணத்திற்கும் பின்னால்
ஓடவில்லை ...
சிறுவர்கள் முதல்
கிழவர்கள் வரை
பதறவில்லை ...
பலமனார்கள்....
ச்ச...
என்று தான் நாம்
கற்க போகிறோமோ ..!!!!!