Tuesday 13 April 2010

ஒரு நாள் ... வித்தியாசமாக..


" ஒரு நாள் ...
  வித்தியாசமாக...
  இப்படி ...

  செல்பேசி அழைத்தாலும் ...
  கையில் எடுக்காமல் ..
  மௌனமாய் இருங்கள் ..!!!

  கொசு கடித்தாலும் ...
  திருப்பி அடிக்காமல் ...
  அட ..!!இரத்தம்...கூட 
  உணவாகிறதே...என்று 
  மார்..தட்டுங்கள்.....!

 பெற்றோர்களை ...
 குழந்தைகளாக்கி...
 குழந்தைகளை...
 பெற்றோர்களாக்கி...விடுங்கள் ...


 உங்கள், 
 நிழலோடு ...
 நிஜமாக ...
 பேசி,சிரித்து,..சண்டையிட்டு 
 பாருங்கள் ..
       
 காதலியை .. ஓட்டுனராக்கி..,
 மோட்டார் வண்டியில் 
 நகர் முழுவதும் ...சுற்றுங்கள் ...

 குடிசையில்..கால் பதித்து 
 மதிய உணவு ...
 கஞ்சி இருப்பினும்
 வயிராற....சாப்பிடுங்கள் ...

 விடிந்த காலையில் ...
 தெருக்களில் போட்ட ...
 கோலத்தை சுற்றிப் பார்த்து
 மதிப்பெண் போடுங்கள் ,,,.
 யார்க்கும் தெரியாமல் ...!

 கடந்து...செல்லும் 
 'ஆம்புலன்ஸ்யில் ' ....யாராக 
 இருப்பினும் ..ஒரு நிமிடம் 
 அந்த இடத்திலே ...நின்று 
 வேண்டிப்  பாருங்கள் .....

 இப்படித்தான்...
 இவையெல்லாம் ...
 வித்தியாசமாகவே....இருக்கிறது ...
 எல்லா நாளும் ...

3 comments:

  1. good. very hard to keep quite when cell phone ringing..

    ReplyDelete
  2. meenakshi sundaram2 May 2010 at 23:58

    thoongum pothu kuda kal attikittae thoonganum....
    illayana ulagam nama seathutome nu ninaichudum....

    ReplyDelete