Thursday 1 April 2010

---->அவள் அப்படிதான் !!


ஒரு நாள் ...
   கடற்கறை...இரவு ....,
   அலையோடு பேசி விட்டு ,
   வரும் போது ...

   வழியில் எங்கயோ...
   பார்த்த முகம் ...
   எனக்கும் புரிந்தது 
   அவளுக்கும் புரிந்தது ...
  
   தெரியாததை..,
   தெரிந்தது ...போல் காட்டுவது இயற்கை  ...
   தெரிந்ததை ...
   தெரியாது போல் காட்டுவது செயற்கை ...!

   அவள் 
   இரண்டாம் வகை ...
   சற்று பின்நாளில்
   ஓடினேன்...கல்லூரிக்கு ...

   என் கல்லூரி 
   மரத்தடி ..
   ஓவ்வொன்றும்...
   ஒவ்வொரு.. கதை சொல்லும் ...

   நம் நாட்டில் ...
   நட்பின் இலக்கணம்..
   ஆண்-ஆண் ...
   பெண் -பெண் ..
 
   பெண்ணோடு ...பேசி விட்டால் 
   கடலை ,காதல் ...
   என்பார்கள் ...பேசத்  தெரியாத ..
   பிரம்மசார்ரிகள்....!!!
 
   ஏனோ ?...
   பேசாமலே சென்று விட்டால் ...
   என் தோழி ...

   நான் கவனிக்கவில்லை ..
   அவள் வந்து இருப்பது 
   அவள் ..,கணவனோடு ..

    என்னை கூட்டி 
   அறிமுகம் ..செய்ய ...
   முடியவில்லை ...அவளுக்கு ...
    இல்லை ...!இல்லை ...
   அவள் சூழ்நிலைக்கு ...

   சார் ..,கொஞ்சம் ..
   தள்ளி நில்லுங்க ,..,
   நாங்கள் போகணும் ...
   என்று ...
   சொன்னால் ...,
   கணவனோடு...அவள் ....!!!!! "

1 comment:

  1. en navalum irandam vagai than.....
    oru vealai pengal yeallarumae irandam vagai thano...

    ReplyDelete