Tuesday 23 March 2010

\/\/\/\/நானும் ஒருவன்\/\/\/\/\

"இங்கே 
இயந்திரமாய்..
இருப்பவர்களில் நானும் ஒருவன் ....

இல்லாத ஒன்றை 
இருப்பதாய் நினைத்து 
தேடுபவர்களில் நானும் ஒருவன் ....

சிக்னலில் பிச்சை எடுக்கும் 
சிறுமிஐ பார்த்து 
பரிதாபப்படும் மனிதர்களில் நானும் ஒருவன் ....

வருமான வரி 
குறைத்துக் காட்டி 
அரசை ஏமாற்றும் 
ஏமாற்றுகாரர்களில் நானும் ஒருவன் ....

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் 
'இந்தியன் ' என்று...
கூச்சலிடுபவர்களில் நானும் ஒருவன் ....

என்னை கடந்து
எந்த பெண் 
சென்றாலும் ...
ஒரு நிமிடம் நின்று 
ரசிப்பவர்களில் நானும் ஒருவன் ....

கல்லூரி தோழியை ..அவள் 
கணவனோடு பார்த்து விட்டு 
கண்டு கொள்ளாமல் 
செல்பவர்களில் நானும் ஒருவன் .....

பொண்ணும்-பையனும் 
பேசினால் ...அவர்கள் 
காதலர்கள் தான் என்று 
கற்பனை செய்பவர்களில் நானும் ஒருவன் ....

புதுபடத்தை ..திருட்டு 
வீசிடி இல் பார்க்கும் ..
திருட்டு பயல்களில் நானும் ஒருவன் ...

முதல் குழந்தை ..
பெண் குழந்தை பிறந்தால் 
கொஞ்சம் வருத்தபடும்
சராசரி மனிதர்களில் நானும் ஒருவன் ...

எல்லாம் தெரிந்தும் 
தெரியாமல் போல் நடக்கும்
 எத்தனையோ ...பேர்களில் 
                                   நானும் ஒருவன் ...."

3 comments:

  1. மிகவும் அழகான சிந்தனை !வாழ்த்துக்கள் நண்பரே !
    தொடர்ந்து எழுதுங்கள் .
    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  2. thabu sankarin sayal niraiya vae therigiratyhu......

    ReplyDelete