மழைச் சாரலில் ..
மாலையின்...மயக்கத்தில் ,
மகனோடு நான் ..
சில கேள்விகள்
பிடிக்கும் ..
சிலர் ..
கேட்பதால் மட்டும் ....
அப்பா ,
நட்பு என்றால் ..?
மாதா...
பிதா ...,
குரு ...,
நண்பன் ...,
தெய்வம் என்பேன் ....
ஆச்சரியமான உண்மை என்றால்..?
சிறு வயதில் ..,
அம்மா சொல்லி
அப்பா தெரியும் ,,,
அப்பா சொல்லி ...
அனைத்து உறவும்
தெரியும் ...
இது தான் உன்
நண்பன் என்று ....
இது வரை .எவரும்
கூறியது இல்லை ....யப்பா ....
ஆண் நட்பு என்றால் ..?
இருந்தாலும்..
இறந்தாலும்....
மதிப்பிட முடியாது ...
உதராணம்...யானை ...
பாதித்தது என்றால்...?
பலரோடு பழக
வாய்ப்பு கிடைத்தும் ..
சிலரோடு நெருக்கமாக
பழகியது தான் ...
தவறு என்பேன் ..
இல்லையென்றால் .../
அந்த பலரோடு
இந்த சிலரும் ...
போய் இருப்பார் ...
நானும் கண்
கலங்காமல்...போய் இருப்பனே...!!
பெண் நட்பு என்றால் ..?
கல்லூரி போட்டோவை
காட்டினாலே..
'வெறும் நட்புதானடி?"
என்பார்...அப்பா அம்மாவிடம் ...
தங்கையோடு தனியாக
பேசினாலே...'சூப்பர் ஜோடி'
என்று சொல்லும்
தரம் கெட்ட உலகம் ...
என்...தோழி
மட்டும் விதிவிலக்கா ?..
மறுகணம் அழைத்தது
செல்பேசி ....
மறு கரையில் ...
பெண் குரல் ...
மகனின் தோழி என்றால் ...
இல்லை என்றேன் ..
சாதரணமாக...
யாருப்பா
போன்ல ...?
எப்போதும் ...
வரும் wrong call
என்றேன் ..
பொறுப்புள்ள
அப்பாவாயாய் ....
மிகவும் ரசித்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் .
பகிர்வுக்கு நன்றி !
super
ReplyDelete